வேலுவிடம் சிக்கிய தமிழ்.. வாயை கொடுத்து மாட்டிய மனோகரி - நினைதேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழை வேலு சுற்றி வளைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
![ninaithen vanthaai serial april 15th episode update mma ninaithen vanthaai serial april 15th episode update mma](https://static-ai.asianetnews.com/images/01hv9htfybw0z7jdc7q3rhv64z/8b4afac8-99d3-41b3-8892-c67e16caeb73_363x203xt.jpg)
அதாவது, வேலு உண்மையான தமிழை கண்டு பிடித்து தனது கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கிறான், அடுத்து வீட்டில் எழில் சாப்பாடு கொடுத்து விட்டு வருவதற்காக ஆசிரமத்திற்கு கிளம்ப கனகவல்லி மனோகரியிடம் நாங்க எல்லாரும் வெளியே போறோம், நீ குழந்தைகளை பார்த்துக்கோமா என்று சொல்ல மனோகரி கேர் டேக்கரை விட நான் நல்லாவே பார்த்துப்பேன் என்று சொல்ல கனகவல்லி அப்படினா சுடர் நீ எழிலோட போய்ட்டு வா மா என்று சொல்ல மனோகரி ஷாக் ஆகிறாள்.
எழில் நான் தனியா போறேன் என்று சொல்ல கனகவல்லி சுடர் அவ கையால் சமைத்து இருக்கா, அவ கையாலே பரிமாறினால் அவளுக்கு சந்தோசமாக இருக்கும் என்று சொல்ல எழிலும் சுடரை அழைத்து கொண்டு கிளம்புகிறான், கனகவல்லி கோவிலுக்கு செல்ல குழந்தைகள் மனோகரியை டார்ச்சர் செய்கின்றனர்.
காரில் சுடர் பேசி கொண்டே இருக்க எழில் கொஞ்சம் பேசாமல் அமைதியா வா என்று திட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.