மின்கட்டனத்தை பாதியாக குறைக்கும் வழியையும் அதற்கான சாதனத்தையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு. 

மின்கட்டனத்தை பாதியாக குறைக்கும் வழியையும் அதற்கான சாதனத்தையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு 2026- 27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது. இதனால் மக்கள் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் மின்சாரக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வழி உள்ளது. அதற்கான சாதனத்தை பொருத்திவிட்டால் ஷார்ட் சர்க்யூட், மின்சாதன பொருட்கள் சேதம் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருக்காது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: கட்டாயம் 5 விளம்பரங்களை பார்க்க வேண்டுமா? Youtube நிறுவனம் விளக்கம்!!

அந்த சாதனத்தின் பெயர் ஜீல்சி மேக்ஸ் பவர் சேவர். இந்த பவர் சேவர் மின்சாரத்தை சேமிக்கிறது. இது மின்னழுத்தத்தைக் குறைக்கிறது என்பதல்ல. உங்கள் மீட்டர் போலவே வேலை செய்யும். இந்த சாதனத்தை நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். பிளிப்கார்ட்டில் இந்த சாதனத்தின் அறிமுக விலை ரூ.1,250 என்று கூறப்படுகிறது. ஆனால் தள்ளுபடியுடன் ரூ.275க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க: எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்? சூப்பர் தகவல் இங்கே.. !!

இதைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், வீட்டில் உள்ள எந்தப் பொருட்களும் அதிக மின்சாரத்தால் பழுதடையாது. அதிகப்படியான மின்னோட்டம் வீட்டிற்குள் நுழைவதையும் தடுக்கிறது. இந்த மின்சாதம் நிறுவிய பிறகு ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் 35% குறைக்கத் தொடங்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் நிறுவுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.