நெல்லையில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார். தகராறில் ஏற்பட்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு
நெல்லை கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (42). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முத்துலட்சுமி கணவரிடம் தகராறு செய்து விட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி
இதனையடுத்து கணவர் மீது நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் முத்துலட்சுமி கடந்த 4 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மீது கொதிக்கும் எண்ணெய்யை வேட்டியை அவிழ்ந்து அந்தரங்க உறுப்பில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை
வலி தாங்க முடியாமல் பாலசுப்பிரமணியன் அலறி துடித்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை நடத்தினர்.
மனைவி கைது
முதற்கட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதை அடுத்து கொதிக்கும் எண்ணெய்யை கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. இதனையடுத்து முத்துலட்சுமி கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரகின்றனர்.
