விராலிமலை வாரச்சந்தையில் தக்காளி விலை ரூ.100 ஐ தொட்டதாலும் அதனுடன் சேர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற காய்கறிகளை விட தினசரி உணவு பயன்பாட்டில் தவிர்க்க முடியாத பொருளாகி உள்ளது தக்காளி. அன்றாடம் தயாரிக்கப்படும் சைவ மற்றும் அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்களில் தக்காளி மிகவும் முக்கிய பொருளாக உள்ளது. இவ்வளவு முக்கியம் இருந்தும் தக்காளியின் விலை நிலையற்றதாகவே உள்ளது. தக்காளியின் உற்பத்தியை பொருத்தே விலை ஏற்றம், இறக்கம் காணும் ஒரு நாள் அதிக விலையும் மற்றொரு நாள் குறைந்த விலைக்கும் விற்பனையாகும்.

பொதுவாக அழுகக்கூடிய உணவு பொருட்களின் விலை நிலையில்லாமல் தான் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே அதேபோல் தக்காளியும் எளிதில் அழுகக்கூடிய பொருள் என்பதால் இதன் விலையும் நிலையில்லாமல் இருந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ. 50 க்கு மட்டுமே விற்பனையாகிய தக்காளி நேற்று 100 ஐ தொட்டது. ஒரு சில இடங்களில் தரமற்ற தக்காளி ரூ.80 க்கு விற்கப்பட்டாலும் தரமான தக்காளி ரூ.100 க்கு விற்பனையானது.

கோவில் திருவிழாவில் கவர்ச்சி பொங்க ஆபாச நடனம்; ஏற்பாட்டாளர் உள்பட 3 பேர் கைது

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கோடை வெயிலின் தாக்கம், தொடர்ந்து வீசி வரும் பலத்தகாற்று என இயற்கை காரணிகளால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்தது இதனால் சந்தைக்கு வரத்து குறைந்ததால் இந்த விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. அனைத்து காய்கறிகளும் கிடைக்கும் விராலிமலை வாரச்சந்தையில் விலையேற்றத்தின் காரணமாக இந்த வாரம் பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

18 வகையான போட்டி தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி உத்தேச தேதி அறிவிப்பு

இந்தநிலையில் தக்காளி விலை தலை சுற்றுகிறது என்றால் மற்ற காய்களின் விலையை கேட்டால் வரும் நாட்களில் குழம்பிற்கு பதியாக ரசம் மட்டுமே ஊற்றி உண்ண முடியும் என்ற நிலை எட்டிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளது.

அந்த வகையில் பீன்ஸ் 80, கத்திரிக்காய் 80, கேரட் 70, இஞ்சி 300, காலிபிளவர் 50, வெண்டைக்காய் 40, பச்சை மிளகாய் 80 என நேற்று வாரச்சந்தையில் விற்கப்பட்டது.