Asianet News TamilAsianet News Tamil

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி… அதிர்ச்சியில் தந்தை தற்கொலை!

தண்ணீர்  தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The boy fell in the water tank and killed the suicide!
Author
Coimbatore, First Published Dec 22, 2018, 1:47 PM IST

 தண்ணீர் தொட்டியில் விழுந்து மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணுவாய் அருகே சி.வி.சி சாய் அவென்யூவை சேர்ந்தவர் மணிகண்டன் (35). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பூவிதா. இவர்களுக்கு தேவதர்சினி (4) என்ற மகளும், தேஜூ அஸ்வீன் (2) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று இரவு வீட்டில் இருந்த மணிகண்டன் தனது மகள், மகனுடன் சேர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடி கொண்டிருந்தார். அப்போது தேவதர்சினி வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சென்று ஒளிந்து கொண்டாள்.

தேஜூ அஸ்வீன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் அருகில் ஒளிந்து கொள்ள சென்றார். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில், சிறுவன் தவறி விழுந்தான். குழந்தைகளை தேடி வெளியே வந்த மணிகண்டன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி தனது மகன் தேஜூஅஸ்வின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தனது மகனின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமே என மனவேதனை அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை மற்றும் தம்பியை தேடி மாடியில் இருந்து இறங்கி வந்த தேவதர்சினி தந்தை தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டாள்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, சமையல் அறையில் இருந்த பூவிதா ஓடிவந்தார். அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை அதிர்ச்சியடைந்த அவர், கதறி அழுதார். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. பின்னர் தேஜூ அஸ்வினை தேடினர். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தகவலறிந்து தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் தேஜூஅஸ்வினை வீடு முழுவதும் தேடினர். அப்போது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடப்பதை கண்டுபிடித்து, மீட்டனர்.

இதையடுத்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அந்தபகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios