தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அதில் பலரும் எதிர்பார்த்த மகளிருக்கான உரிமை தொகை எப்போது தட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil Nadu Budget 2023: தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறுகிறது என தெரியுமா?
Tamil Nadu Budget 2023: தமிழக சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறுகிறது என தெரியுமா?

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், நாளை வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கூட்டமானது வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்? பட்ஜெட்டில் அறிவிப்பு!!
TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?
தமிழக அரசின் 2023ம் ஆண்டின் பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாங்கதான் பர்ஸ்ட் இருந்தாலும்.. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு இது - முதல்வரை பாராட்டிய கமல் ஹாசன்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ !!
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு, மெட்ரோ ரயில் என பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் 2023ம் பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.
இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?
தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு - சுகாதாரத்துறை அறிவிப்புகள்
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ₹2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம்.. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் - அதிரடி அறிவிப்புகள்
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு கட்டணம் அதிரடியாக குறைப்பு.. எவ்வளவு தெரியுமா? நிதியமைச்சர் சொன்ன தகவல்..!
பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க
போரில் உயிரிழக்கும் தமிழக ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்வு..!
நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்.. ஓய்வூதியம், பராமரிப்பு உதவித்தொகை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க முடிவு
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு
மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு
வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் தொடக்கம்
சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள்
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு
புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி.
எண்ணும் எழுத்து திட்டம் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ.110 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும். தற்போது 1 முதல் 3ம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். 10 கோடி செலவில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படும்
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது. இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி சாலை மேம்பாலம் கட்டப்படும்
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
