தொழில் வளர்ச்சி ஏற்படும்.. சென்னையில் "உலக முதலீட்டாளர் மாநாடு 2024" - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!
Global Investors Meet 2024 : வருகின்ற ஜனவரி 7 ஞாயிற்று கிழமை மற்றும் 8ம் தேதி திங்கள்கிழமை ஆகிய இரு நாட்களிலும் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடந்தது வருகின்றது.
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தனது X பக்கத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அதில் "உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்வு நெருங்கி வருவதால், எதிர்பார்ப்புடன் கூடிய பல நல்ல தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. 30,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், எங்கள் பிரச்சாரங்களான #TitansofTamilNadu மற்றும் #OneTrillionDreams ஆகியவை பரவலான ஒரு உற்சாகத்தைத் தூண்டியுள்ளன".
"சென்னையில் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் 450க்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன், தமிழ்நாட்டின் தொழில் வளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு நிகழ்வாக இது உள்ளது" என்று அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பிரதான சாலையை ஆக்கிரமித்து அடாவடி செய்த விசிகவினர்; சேலத்தில் மக்கள் அவதி!
"நாங்கள் 26 சிந்தனை தலைமை அமர்வுகளை வரிசைப்படுத்தியுள்ளோம். எங்களிடம் ஒரு MSME பெவிலியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு பெவிலியன், பல நாட்டு அரங்குகள் மற்றும் StartupTN பெவிலியன் ஆகியவை உள்ளன. பிரதிநிதிகள் மாநிலத்தின் தொழில்துறை அதிசயத்தைக் காணவும், வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது இந்த மாநாடு" என்று அவர் அந்த பதிவில் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் தான் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடைபெற உள்ளது. வருகின்ற ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள் இந்த மாபெரும் மாநாடு நடைபெற உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!