அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை 2வது நாளாக நடந்திய விசாரணை இரவு 10 மணி அளவில் நிறைவு பெற்றது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணியிடம் அமலாக்கத்துறை 2வது நாளாக நடந்திய விசாரணை இரவு 10 மணி அளவில் நிறைவு பெற்றது. நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் நடந்த இந்த விசாரணை சுமார் 6 மணிநேரம் நடந்திருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, விழுப்புரத்தில் உள்ள அவரது மகன் கௌதம் சிகாமணியின் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 19 மணிநேரம் நீடித்த விசாரணைக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மறுநாள் மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி அமைச்சர் பொன்முடி மறுறம் அவரது மகன் கௌதம் சிகாமணி இருவரும் இன்றும் விசாரணைக்குச் ஆஜராகி இருக்கின்றனர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய விசாரணையை தொடர்ந்தனர்.

இதனிடையே, மாலையில் அமலாக்கதுறை நேற்று (ஜூலை 17ஆம் தேதி) நடைபெற்ற விசாரணை தொடர்பான விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணியிடன் இடங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றிய பணம் மற்றும் ஆவணங்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது.
அதில், "சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் 17/07/2023 அன்று சட்டமன்ற உறுப்பினரும் (எம்.எல்.ஏ) தமிழக அரசின் உயர் கல்வி அமைச்சருமான கே. பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி, எம்.பி. ஆகியோருக்குத் தொடர்புடைய ஏழு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது." என்று தெரிவித்துள்ளது.
மேலும், "இந்தச் சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ. 81.7 லட்சம் பணம், சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள் வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளது.
2006-2011 வரை சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன், உறவினர்கள் உள்பட 5 பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமத்தை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கிடைத்த வருவாய் பினாமி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த PT Excel Mengindo என்ற நிறுவனத்தில் ரூ.41.57 லட்சம் மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டன. அவை 2022ஆம் ஆண்டு ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் M/s Universal Business Ventures FZE என்ற நிறுவனமும் வாங்கப்பட்டிருக்கிறது எனவும் அமலாக்கத்துறை சொல்கிறது.
NDA என்றால் புதிய இந்தியா, வளர்ச்சி, நம்பிக்கை: புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி
