மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் ரூ.81 கோடி கோடியில் பேனா நினைவுச்சின்னம் அமைய உள்ளது. கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

கலைஞர் நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவுவாயில் அமைக்கப்பட்டு அங்கிருந்து கண்ணாடி பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்னாடி பாலம் வழியாக சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு கூட்டத்தில் பலர் ஆதரவு தெரிவித்த நிலையில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது?வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கிறாரா? வெளியான தகவல்

இந்த நிலையில் சென்னை மெரினாவில் கலைஞர் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் தந்த நிலையில், நேற்று மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியது. எனினும் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஎன்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்து, கண்காணிக்க வேண்டும்,

அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மண் அரிப்பு, மணல் திரட்சி குறித்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும், தவறான போலியான தகவல் இருப்பது தெரியவந்தால் அனுமதி வாபஸ் பெறப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நினைவுச் சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐஐடி மற்றும் பிற நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 3 மாதங்களில் நினைவு சின்ன கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறார் எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது!!