Asianet News TamilAsianet News Tamil

இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் இடைவிடாது மழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்று டெல்டா, தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Heavy Rain in 15 districts - Today Weather Report
Author
First Published Oct 13, 2022, 2:11 PM IST

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” குமரிக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கிழடுக்கு சுழற்சி
காரணமாக,

13.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர்‌, திருச்சி, டெல்டா மாவட்டங்கள்‌ தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, புதுக்கோட்டை மற்றும்‌ தென்தமிழக மாவட்டங்கள், காரைக்கால்‌  ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி, கடலூர்‌ மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

15.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ வட உள்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.10.2022 மற்றும்‌ 17.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:நெருக்கமாக பழகி வந்த ஆசிரியர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்.. செல்போனில் சிக்கிய புகைப்படம்..

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

13.10.2022 : குமரிக்கடல்‌, மன்னர்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios