Asianet News TamilAsianet News Tamil

இன்றும் நாளையும் 16 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் மழை.. வானிலை அப்டேட்

குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி‌ காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain in 16 districts - Today weather report
Author
First Published Oct 12, 2022, 2:39 PM IST

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி‌ காரணமாக,

12.10.2022 மற்றும்‌ 13.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை,திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.!

15.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, கரூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌,திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, திருச்சி, தர்மபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:சூடுபிடிக்கும் கொடநாடு வழக்கில் திருப்பம்..! நீதிமன்றத்தில் வாளையாறு மனோஜ் கோரிக்கை..? நிராகரித்த நீதிபதி

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

12.10.2022: குமரிக்கடலின்‌ தெற்கு பகுதியில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:தீபாவளிக்கு 11 நாட்களே உள்ளது..! போனஸ் என்னாச்சு..? பொதுத்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய அன்புமணி

Follow Us:
Download App:
  • android
  • ios