Asianet News TamilAsianet News Tamil

இன்புளுயன்ஸாவுக்கு முதல் முறையாக அரசு சார்பில் இலவச தடுப்பூசி… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

free vaccine for influenza for the first time by the govt says minister ma subramanian
Author
First Published Mar 25, 2023, 9:37 PM IST

இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிசைப்பகுதிகளில் இருக்கும் மகளிர் தினந்தோறும் வாழ் வாதரத்திற்கு சிரமப்பட்டு வந்தனர். 1986 இல் கலைஞர் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கியது மூலம் பல நல்ல முன்னேற்றங்கள் உள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்களை மகளிருக்கு அறிவித்து உள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் H3N2 என்னும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. முதல் முறையாக வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு காய்ச்சல் முகாம் 1586 இடங்களில் ஒரே நாளில் நடத்தப்பட்டது. 10 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பழனி : ஆசிரியர் அடித்ததில் மாணவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் புகார்!

அதன் மூலம் 14 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர். 4308 மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த காலிப் பணியிடங்களை எம் ஆர் பி மூலம் நிரப்பப்படும் என கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டது போல் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. 1021 மருத்துவ பணியாளர்கள் தேர்வு குறித்து போடப்பட்டு இருந்த வழக்கு முடிவடைந்துள்ள நிலையில், 1021 மருத்துவர்களையும் நியமிக்கும் பணி நடைபெற தொடங்கி உள்ளது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பித்து உள்ளனர், இதற்கு ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது. அதே போல 986 மருந்தாளர் பணிக்கான தேர்வு ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. பின் படிப்படியாக குறைந்தது. சில நாட்கள் ஒற்றை இலக்க பாதிப்பாக இருந்தது. இப்போது XBB BA4 எனப்படும் உருமாறிய ஒமிகிரான் பாதிப்பு ஒரு நாளைக்கு 80 பேர் வரை தமிழ்நாட்டில் உள்ளது, இந்தியாவில் 1500 மேல் கடந்து உள்ளது. இதனை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எங்கும் ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இல்லை, தனி தனியே தான் பாதிப்பு உள்ளது.

இதையும் படிங்க: விடாமல் காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி! பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் தற்கொலை.. நெஞ்சில் அடித்து கதறும் மனைவி.!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2% பேருக்கு தோராயமாக ஆர் டி பி சி ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை, மருத்துவமனைகளில் சேர்க்கும் அளவுக்கு கூட பாதிப்பு இல்லை. வைரஸ் பாதித்தவர்கள் பாதிப்பு சரியாகும் வரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவர் அறிவுரை இன்றி மருந்துகளை உட்கொள்ள கூடாது. பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் பயன்படுத்தி கொள்ள அரசு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தற்போது பாதிக்கப்படுபவர்கள் அனைவருக்கும் xbb ba4 என்ற உருமாறிய ஓமிக்ரான் தான் உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் 86 பேர் இதற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது. முதல் முறையாக தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்புக்கு வரும் நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும். இந்தியாவில் முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி போடப்படுகிறது. விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனையில் கூட இன்புளுயன்சா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios