MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?

மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Dec 07 2025, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியில் திருத்துரைபூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும். அதேபோன்று மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

24
Image Credit : Asianet News

இந்த விபத்தில் இரண்டு பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். வலியால் அலறி துடிப்பதை பார்த்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு ஐந்து ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Related image1
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
Related image2
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
34
Image Credit : our own

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோட்டூர் பகுதியில் வளைவான பகுதியில் வந்த போது நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் பயணிகள் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

44
Image Credit : x

கடந்த சில நாட்களுக்கு முன் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து பேருந்துகள் விபத்தில் சிக்குவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
2026க்குள் மேலும் 30 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு!
Recommended image2
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
Recommended image3
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Related Stories
Recommended image1
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
Recommended image2
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved