Asianet News TamilAsianet News Tamil

Omeprazole – Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! விளக்கம் கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

Omeprazole – Fomepizole குழப்பத்தில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Edappadi Palaniswami left confused between Omeprazole and Fomepizole:  Minister Ma. Subramanian explains sgb
Author
First Published Jun 22, 2024, 5:47 PM IST | Last Updated Jun 22, 2024, 6:00 PM IST

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களைக் காப்பாற்றத் தேவையான மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி Omeprazole – Fomepizole என இரண்டு மருந்துகளின் பெயர்களைக் கூறி குழப்பிய நிலையில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் அந்த மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் பின்பற்றப்படும் என்று கேலியாகத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

•    20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன்.

•    பிறகு இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது. 

யார் இந்த மகேஷ் குமார் அகர்வால்? கள்ளச்சாராய வழக்கில் இவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?

•    இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol)  மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

•    ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

•    மருத்துவ நிபுணர் எடப்பாடி வேறு ஏதாவது  புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சூப்பர் சான்ஸ்! 5 நாள் மட்டும் ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கும் ஓலா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios