சென்னை மாநகர ஆட்டோக்களில் QR குறியீடு முறையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம், அவசர காலத்தில் காவல்துறையினரை எளிதில் அணுகலாம்.

CHENNAI AUTO SAFETY : சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89.641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. எனவே ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக ஆட்டோவை கண்டறிவது மிகவும் சிரமான நிலை நீடித்தது. இந்தநிலையில் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் 88.859 தனிப்பயனாக்கப்பட்ட (Customized) மற்றும் பிரத்யேக தனித்துவமான QR குறியீட்டை உருவாக்கப்பட்டுள்ளது. 

அலறிய தலைநகர் சென்னை! ஆட்டோவில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை! திமுகவை விளாசும் அண்ணாமலை!

ஆட்டோவில் QR குறியீடு

எனவே சென்னை பெருநகர காவல்துறையின் முன்முயற்சியாக சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி QR குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்களிடம் QRகுறியீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும். சென்னை பெருநகர காவல்துறை, ஆட்டோரிக்க்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு QR குறியீடு அடிப்படையிலான அவசரகால பதில் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 

QR குறியீடுகளை பயன்படுத்தும் முறை

இந்த QR குறியீடு ஆட்டோரிக்க்ஷா / வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். 

இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். 

 அவசரநிலை ஏற்பட்டால், SOS பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். 

இது ஆட்டோரிக்க்ஷாவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள். உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக. பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதிசெய்யும் வசதியும் இதில் உள்ளது.

பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி.! தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு

அவசர கால உதவி

இப்புதிய OR குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால். SOS எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் கால் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரியவருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின் போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது.

மேலும், சென்னை பெருநகர காவல் துறை, Rapido Ola மற்றும் Uber போன்றவற்றுடன் இணைந்து தங்கள் அவசர எச்சரிக்கைகளை சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கிறது. இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பயன்பாடுகள் மூலம் செய்யப்படும் எந்தவொரு SOS அழைப்பும் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக அனுப்பப்படும். இதனால் காவல்துறை அதிகாரிகள் பயணிகளின் வேண்டுகோளின் பேரில் பயணத்தின் நிகழ்நேரத்தை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.