ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னையைதலைமையிடமாகக்கொண்டுதிருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர்உட்படதமிழகத்தின் 28 இடங்களில்ஆருத்ராகோல்டுடிரேடிங்பிரைவேட்லிமிடெட்என்றதனியார்நிறுவனம்செயல்பட்டுவந்தது. தங்கள் நிறுவனத்தில் மூதலீடு செய்யும் பணத்திற்குஅதிகவட்டிதருவதாகவிளம்பரம் செய்துள்ளது. இந்தநிறுவனத்தின்வாக்குறுதியைநம்பிசுமார்ஆயிரக்கணக்கானோர்ரூ.2,438 கோடிவரைமுதலீடுசெய்திருந்தனர். ஆனால்ஆருத்ராகோல்ட்நிறுவனம்சொன்னபடிபணத்தைகொடுக்காமல்ஏமாற்றியுள்ளது.

இதையும் படிங்க : வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்

இதனிடையே அந்நிறுவனம் மக்களிடம் ஆசையை தூண்டி, மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில், பொருளாதாரகுற்றப்பிரிவுகாவல்துறையினர்ஆருத்ரா கோல்டு தொடர்பானஅலுவலகங்களில்சோதனைமேற்கொண்டுமுதலீடுகளைபெறதடைவிதித்தனர்.

தொடர்ந்துபொருளாதாரகுற்றப்பிரிவுகாவல்துறையினர்மேற்கொண்டவிசாரணையின்அடிப்படையில்தற்போதுவரை 11 பேர்கைதுசெய்யப்பட்டுசிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். மேலும்நிறுவனத்தின்இயக்குநர்கள்உட்படபலருக்கும்எதிராகலுக்அவுட்நோட்டீஸ்பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் அவர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலி மூலம் பேசுவதால் ட்ராக் செய்ய முடியவில்லை. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஆட்சி மாற்றத்தின் அடையாளம் தான் செங்கோல்.. ஆதாரம் உள்ளது.. திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்