திருவண்ணாமலையில் காவலர்களே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கையாலாகாத திமுக அரசால், பெண்கள் வெளியே செல்லவே அஞ்சுவதாகவும் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது எனவும் சாடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது

“திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சகோதரியின் கண் முன்னரே, கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.” என அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும், “காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது” எனச் சாடினார்.

Scroll to load tweet…

பெண்கள் வெளியே செல்ல அஞ்சும் சூழல்

மேலும், "பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது," என்று அவர் தி.மு.க. அரசின் மீது குற்றம் சாட்டினார்.

"திமுக அரசின் மீதும், சட்டத்தின் மீதும், குற்றம் செய்பவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை என்பதற்கு, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்," என்றும் திரு. அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறையினரே குற்றம் இழைத்திருக்கும் இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.