கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி .. இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கோர சம்பவம்
தனியார் நிகழ்வில் இலவச வேட்டி, சேலை வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடியில், தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பெண்கள் ஒரே இடத்தில் குவிந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர். இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற முயன்றபோது நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பெண்களை அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர், போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!