Asianet News TamilAsianet News Tamil

லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்.. ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 15 பேர் படுகாயம்.!

நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Truck-van collision.. 3 people including a one-year-old child died on the spot tvk
Author
First Published Dec 31, 2023, 11:05 AM IST

தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரி - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், ஒரு வயது குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!

Follow Us:
Download App:
  • android
  • ios