கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு; உறவினர்கள் கதறல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
![older man death in district collector office for chest pain in coimbatore vel older man death in district collector office for chest pain in coimbatore vel](https://static-ai.asianetnews.com/images/01hj0mg6cgpz0fc8k5a3mqtqcd/whatsapp-image-2023-12-19-at-14-23-26_363x203xt.jpg)
கோவை பூமார்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் இன்று தனது மகள் மற்றும் பேத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பதற்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக பாலசுப்ரமணியம் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி கைகொடுக்காத நிலையில் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நாடித்துடிப்பு இல்லாத காரணத்தால் மாரடைப்புக்கான முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
திருச்சி மலைக்கோட்டையில் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு தற்கொலை
ஆனால் முதலுதவி பலனளிக்காத சூழ்நிலையில் பாலசுப்ரமணியம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாலசுப்பிரமணியத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D