Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு... தமிழகத்தில் இந்த பகுதிக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்..!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வால்பாறை செல்ல இ-பாஸ் அவசியம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

epass needs to valparai
Author
Coimbatore, First Published Oct 7, 2020, 2:32 PM IST

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வால்பாறை செல்ல இ-பாஸ் அவசியம் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்திற்குப் பிறகு சற்று தளர்வு அளிக்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

epass needs to valparai

ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு மட்டும் இ-பாஸ் கடைபிடிக்கப்பட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் மக்கள் குவிய துவங்கினர். வால்பாறையிலும் மக்கள் அதிகளவில் வரத்துதொடங்கினர்.

epass needs to valparai

இதனிடையே வால்பாறை பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வால்பாறை செல்வதற்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios