Pro Kabaddi League: ஜெய்ப்பூர், புனே அணிகள் ஒரே மாதிரி வெற்றி..! பிளே ஆஃபிற்கு முன்னேறிய 4 அணிகள்
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் 44-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்து பிளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.
இன்று நடந்த முதல் போட்டியில் புனேரி பல்தான் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட புனேரி பல்தான் அணி 44-30 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்
மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் ஹரியானா ஸ்டீலர்ஸும் மோதின. இந்த போட்டியிலும் முதல் போட்டியை போலவே, ஏற்கனவே பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஜெய்ப்பூர் அணி, புனே ஜெயித்ததை போலவே, அதே 44-30 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் மற்றும் யுபி யோதாஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.