Indian soldiers in the next round of the Indonesian Open Super Series

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் அடுத்த சுற்றில் கால்பதித்தனர்.

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் பிரணாய் மற்றும் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா மோதினர்.

இதில், 21-13, 21-18 என்ற நேர் செட்களில் சினிசுகாவை தோற்கடித்து வென்றார் பிரணாய்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வாங் விங் கீ வின்சென்டுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் வின்சென்டை தோற்கடித்து வெற்றிப் பெற்றார் ஸ்ரீகாந்த..

இருவரும் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியுள்ளனர்.