Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்.. பிசிசிஐ அதிரடி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனை குழுவிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
 

bcci wants cricket advisory committee to select new coach for indian womens team
Author
India, First Published Dec 1, 2018, 2:43 PM IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனை குழுவிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் ரமேஷ் பவார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி மகளிர் டி20 உலக கோப்பையின் அரையிறுதிவரை முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. அந்த போட்டியில் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

bcci wants cricket advisory committee to select new coach for indian womens team

இந்த விவகாரத்தில் மிதாலி ராஜும் ரமேஷ் பவாரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை ரமேஷ் பவார் முடித்து வைக்க நினைப்பதாக மிதாலி ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து இருவரிடமும் பிசிசிஐ தனித்தனியாக விசாரணை நடத்தியது. அதன்பிறகு ரமேஷ் பவாரை அணியின் பயிற்சியாளராக நீடிக்க வைக்க பிசிசிஐ விரும்பவில்லை. ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்குமாறு சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழுவை கேட்டுக்கொண்டுள்ளது. 

bcci wants cricket advisory committee to select new coach for indian womens team

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழு தான் ரவி சாஸ்திரியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது. அந்த பணி முடிந்ததும் இந்த குழு வேறு எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. அதன்பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவருகிறது. இந்நிலையில், இந்திய மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios