Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND அவரு நல்லாவே ஆடியிருந்தாலும், அஷ்வினை டீம்ல சேர்க்கணும்னா அவருதான் இந்திய அணியின் பலிகடா..!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடவில்லை என்றால், தனக்கு பெரிய வியப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

michael vaughan feels ravichandran ashwin will play in third test against england
Author
Headingley, First Published Aug 24, 2021, 4:55 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.

எனவே 2வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி. 

லண்டன் லார்ட்ஸில் கண்டிஷனை கருத்தில்கொண்டே அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லையே தவிர, இல்லையென்றால் அவர் அந்த போட்டியில் ஆடியிருப்பார். நாளை ஹெடிங்லியில் தொடங்கும் 3வது டெஸ்ட்டில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடியே தீர வேண்டும் என்பதே முன்னாள் வீரர்கள் அனைவரின் கருத்து.

அந்தவகையில், அஷ்வின் குறித்து பேசிய மைக்கேல் வான், இந்த வாரம் மிகச்சிறப்பானதாக இருக்கும். நன்றாக வெயில் அடிக்கும்; எனவே கண்டிஷன் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஷ்வின் இந்த போட்டியில் ஆடவில்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன். இந்திய அணி கண்டிப்பாக 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் என்ற காம்பினேஷனுடன் தான் ஆடும். அஷ்வினை சேர்த்தால் இஷாந்த் சர்மா தான் நீக்கப்படுவார். கடந்த போட்டியில் இஷாந்த் சர்மா நன்றாகவே பந்துவீசியிருந்தாலும், அவர் தான் நீக்கப்படுவார். 3, 4 மற்றும் 5ம் நாள் ஆட்டத்தில் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios