மோசமான சாதனை படைத்த இஷான் கிஷான்: அதுக்கு பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமா?
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இஷான் கிஷான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் முதலில் களமிறங்கி இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர்.
மீண்டும் வாய்ப்பு இழந்த பிருத்வி ஷா: அதிரடி காட்ட தயாரான இந்தியா டாஸ் வென்று பேட்டிங்!
முதல் ஓவரை நியூசிலாந்து அணியின் அறிமுக வீரர் பென் லிஸ்டெர் வீசினார். அதனை இஷான் கிஷான் எதிர்கொண்டார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து, மைக்கேல் பிரேஸ்வெல் 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் இஷான் கிஷான் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். நடுவர் அவுட் கொடுத்தாலும், அதை மறுத்து, மேல்முறையீடு செய்தார். டிவி ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பில் படுவது தெளிவாக தெரியவர நடையை கட்டினார்.
முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்: டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ்!
இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், கடந்த 14 டி20 போட்டிகளில் முறையே இஷான் கிஷான் 27, 15, 26, 3, 8, 11, 36, 10, 37, 2, 1, 4, 19 மற்றும் 1 இந்தப் போட்டி என்று ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை. தொடர்ந்து மோசமான பார்மில் இருக்கும் இஷான் கிஷானுக்குப் பதிலாக பிருத்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
கையில் எலும்பு முறிவு, காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒரே கையால் ஆடிய ஹனுமா விஹாரி: வைரலாகும் வீடியோ!
தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் சொதப்பி வரும் இஷான் கிஷானை கடுமையாக விமர்சித்து வருவதோடு, பிருத்வி ஷாவிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷானைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி தன் பங்கிற்கு அதிரடி காட்டி விளையாடினார். 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூரயகுமார் யாதவ்வும் ஓரளவு ரன் எடுத்தார். அவர் 13 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெளியேறினார்.