Asianet News TamilAsianet News Tamil

இன்னிக்கு நான் தான் பொளந்து கட்டப் போறேன் - மழை வரும், ஆனா வராது; மேட்ச் நடக்குமா? நடக்காதா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியின் போது இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

India vs Australia 1st ODI match may stop due to Rain hits today?
Author
First Published Mar 17, 2023, 9:51 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியனானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார். அவரது மைத்துனனுக்கு திருமணம் என்பதால், இந்தப் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை. 2ஆவது ஒரு நாள் போட்டியில் அவர் இடம் பெறுவார். இன்றைய போட்டிக்கு ரோகித் சர்மா கிடையாது என்பதால், அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார்.

சாம்பியன் மீண்டும் வருவார் - ரிஷப் பண்ட் தோள் மீது கை போட்டு ஹாயாக அமர்ந்து பேசிய யுவராஜ் சிங்!

ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி பிரச்சனையால் இந்த போட்டியில் விளையாடவில்லை. எனினும், அவர் தொடரிலிருந்து விலகுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரோகித் இல்லாத நிலையில், இஷான் கிஷான் தான் சும்பன் கில்லுடன் இணைந்து ஓபனிங் இறங்குவார் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் காயம் காரணமாக விலகிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்ற இஷான் கிஷான் 210 ரன்கள் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

India Playing XI 1st ODI: ரோகித், ஷ்ரேயாஸ் கிடையாது: ஹர்திக் பாண்டியா கேப்டன் ஓகே, யாரு சார் ஓபனிங்?

இந்த நிலையில், இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியிருப்பதாவது: நேற்று மும்பையில் இடைவிடாமல் மழை பொழிந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 17ஆம் தேதியான இன்று வரை மழை நீடிக்கும். லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்று எச்சரித்துள்ளது. இதனால், இன்றைய முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

ஹர்திக் இதை செய்தால் ரோகித்துக்கு பதிலாக அவர் தான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் - சுனில் கவாஸ்கர்!

மேலும், வியாழன் அன்று மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை மற்றும் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். எனினும், வெள்ளிக்கிழமைக்கான ஆரம்ப வானிலை முன்னறிவிப்புகளின் கூற்றுப்படி 32 டிகிரி செல்சியஸுடன் வெயில் மற்றும் மங்கலான நாளாக இருந்தன. ஆனால் அது விளையாடும் போது 29 டிகிரிக்கு குறையும். போட்டி நடக்கும் நாளன்று மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கோலி, ரோகித் சர்மாவுக்கு கிளம்பும் நேரம் வந்துருச்சா? பிருத்வி ஷாவிற்கு ஏன் வாய்ப்பு இல்லை? முரளி விஜய் கேள்வி!

Follow Us:
Download App:
  • android
  • ios