Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் 15வது சீசன்: கூடுதலாக 2 அணிகள் சேர்ப்பு..! பிசிசிஐ வெளியிட்ட முக்கியமான தகவல்

ஐபிஎல் 15வது சீசனுக்கான 2 புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறும் கால அவகாசம் அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ.
 

bcci extends date of purchasing tender for new teams till october 20
Author
Chennai, First Published Oct 13, 2021, 10:44 PM IST

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், வரும் 15ம் தேதியுடன் இந்த சீசன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008லிருந்து ஒவ்வொரு சீசனிலும் 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.

அதனால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.7000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bcci extends date of purchasing tender for new teams till october 20

புதிய 2 அணிகளில் ஒரு அணி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொண்ட அகமதாபாத்தின் பெயரில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஏல விண்ணப்பத்தை பெறும் கால அவகாசம் அக்டோபர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்..! சூப்பர் ஆல்ரவுண்டருக்கு அணியில் இடம்

Follow Us:
Download App:
  • android
  • ios