ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி முகாமில், 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியின் சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜாவின் பந்துகளை, வலைப்பயிற்சியின்போது வைபவ் துவம்சம் செய்யும் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

வைபவ் சூர்யவன்ஷி அனல் பறக்கும் பேட்டிங்

இந்த பயிற்சியின்போது, ஜடேஜாவின் பந்துகளை வைபவ் எந்தவித பயமும் இல்லாமல் எதிர்கொண்டார். ஜடேஜாவின் அனுபவத்திற்கே சவால் விடும் வகையில், மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பந்துகளைப் பறக்கவிட்டார். இந்த இளம் வீரரின் அதிரடியைக் கண்டு ஜடேஜா திகைத்து நிற்கும் காட்சியும் வீடியோவில் உள்ளது. நம்பமுடியாமல் வைபவைப் பார்க்கும் ஜடேஜாவின் ரியாக்‌ஷன், இப்போதே ட்ரோல்களிலும் இடம்பிடித்துவிட்டது.

மிரண்டுபோன ஜடேஜா

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயது வீரரான வைபவ், ஜடேஜா போன்ற ஒரு ஜாம்பவானை பயிற்சியில் எதிர்கொண்ட விதம், ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய டிரேடுகளில் ஒன்றாக, சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு, சென்னையின் நம்பிக்கைக்குரிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணிக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

View post on Instagram

ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி இல்லை

ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று செய்திகள் வந்தாலும், சஞ்சுவின் வாரிசாக ரியான் பராக்கை ராஜஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. மார்ச் 28-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில், மார்ச் 30-ம் தேதி கவுகாத்தியில் சஞ்சுவின் முன்னாள் அணியான ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராகவே சென்னையின் முதல் போட்டி நடைபெறுகிறது.