Asianet News TamilAsianet News Tamil

வீட்டில் துர்சக்திகள் வராமல் இருக்க இதை செய்யுங்கள்!!

முதலில் சுறுசுறுப்பற்ற நிலைமை ஏற்பட்டு, பின், கை மற்றும் கால்களில் மூட்டு வலிகள் ஏற்படும். கண்களில் எரிச்சல் மற்றும் சில பேருக்கு கண்கள் கூட சிவப்பாக மாறும். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகள். இதனை சரி செய்வது அவசியம். 

Do this to avoid evil spirits
Author
First Published Oct 10, 2022, 3:57 PM IST

நமது வீடுகளில் எப்போதுமே சண்டைகளும் சச்சரவுகளும், இரவில் நிம்மதியான தூக்கமும் இல்லாமல், பணக்கஷ்டம், போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் வீடுகளில்  கண்ணுக்குத் தெரியாத தீய சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதனால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். 

முதலில் சுறுசுறுப்பற்ற நிலைமை ஏற்பட்டு, பின், கை மற்றும் கால்களில் மூட்டு வலிகள் ஏற்படும். கண்களில் எரிச்சல் மற்றும் சில பேருக்கு கண்கள் கூட சிவப்பாக மாறும். இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் நம் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகள். இதனை சரி செய்வது அவசியம். 

துர்சக்திகள் வீடுகளில் இல்லாமல் இருக்க.. 

 மகாலஷ்மிக்கு இணையாக உப்பு உள்ளது என்று சொல்கிறோம். நமது வீட்டில் உள்ள சமையலறையில் உப்பு நிறைந்திருந்தால் மகாலஷ்மி நிறைவாக இருக்கிறாள் என அர்த்தம். அதனால் தான் உப்பு பாத்திரத்தை  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலி செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். உப்பை வாங்கினால் கூட நல்ல நாட்களில் மட்டும் வாங்கினாலே வீட்டில் செல்வம் தழைத்தோங்கும் என்றும் சொல்வதுண்டு. 

உப்பும் மகாலஷ்மி போன்று கடலில் தோன்றியதே. உப்பு என்பது சமைக்க மட்டுமில்லை. பிறந்த குழந்தைகள் முதல் அனைவருக்கும் திருஷ்டி சுற்றி போடவும், வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிய வீட்டின் வெளியில் ஒரு கிண்ணம் வைப்பதும், பரிகாரங்களின் போதும், வீட்டில் தீராத பிரச்சனைகள் இருந்தால் உப்பை வாங்கி கோவில்களில் கட்டுவதும் என்று இப்படி பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்துகிறோம். இந்த உப்பை கொண்டு செய்யும் பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். 

யாராச்சும் சாபம் விட்டால் பலிச்சிடுமா? யார் சாபம் பலிக்கும்!

பிரம்ம முகூர்த்தம்

அந்த நாட்களில் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில்  செய்யும் எல்லா செயல்களுக்கும் பலன் உண்டு. தோஷமான நாளாக இருந்தாலும்  பலன் உண்டு. குறிப்பாக உப்பு பரிகாரம் எப்போது செய்வதாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்குங்கள். 

பொதுவாக வீடுகளில் துர்சக்திகள் உள்ளது என்றால் ஜோதிடர்கள் இதற்கு சில பரிகாரங்களையும் சொல்வார்கள். அந்த பரிகாரத்தோடு நீங்கள் தவிர்க்காமல் செய்ய வேண்டிய பரிகாரம் உப்பு பரிகாரம். 

குறிப்பாக புதிதாக கண்ணாடி கிண்ணம் ஒன்றை வாங்கி, நிறைய கல் உப்பை அதில் நிரப்பி, வாசற்படியில் வைத்து மறுபக்கம் அகல் விளக்கு ஒன்றை ஏற்றுங்கள். தினமும் இந்த கல் உப்பை மாற்ற வேண்டும். பின்னர் இதனை ஓடும் நீரில் கொட்டி விட வேண்டும். சிலர் இதை சேர்த்து வைத்து மொத்தமாக கொட்டுவார்கள். அப்படி இருந்தால் அந்த உப்பை வீடுகளுக்குள் கொண்டு வராமல் வெளியிலேயே வைத்திருந்து பிறகு ஓடும் நீரில் வீசி விட வேண்டும். 

திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?

இப்படி செய்வதால் வீட்டிற்குள் துர்சக்திகள் நுழையாது. வீட்டிற்குள் இருக்கு எதிர்மறை எண்ணங்கள், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை சக்திகள் போன்ற அனைத்தும் அழிந்து வீட்டில் நேர்மறை சக்திகள் வளரும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை, பணக்கஷ்டங்கள் போன்றவையும் ஒவ்வொன்றாக நிவர்த்தி அடையும்.

இந்த உப்பு பரிகாரம் செய்வதன் மூலம் நமது மனதுக்குள் இருக்கும் கவலை, பொருளாதாரம் குறித்த பிரச்சனைகள், கோபம், எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தம், கஷ்டம் ஆகிய அனைத்து துன்பங்களும் உப்பு போன்று கரைந்து விடும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios