Asianet News TamilAsianet News Tamil

Breaking: 3 ஆண்டுகள் சிறை தண்டனை... அமைச்சர், எம்எல்ஏ பதவியை இழந்தார் பொன்முடி..

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது. 

Minister Ponmudy sentenced to 3 years imprisonment in disproportionate assets case vel
Author
First Published Dec 21, 2023, 12:02 PM IST | Last Updated Dec 22, 2023, 6:38 AM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளிகள் என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து அவர்களுக்கான தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இறால் அவர் சிறை க்கு செல்லும் வேண்டியது அவசியம் இல்லை.

மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் நீச்சல் அடித்த தவளை; வாடிக்கையாளர் அதிர்ச்சி

 ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி எம்.எல்.ஏ தகுதியை இழந்துள்ளார். இதனால் அவரது அமைச்சர் பதவியும் தானாகவே பறிபோகிறது.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதற்கு பிறகு உயர் நீதிமன்ற உத்தரவு நகல் வந்தால் அதை மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவார்கள் அதே நேரத்தில் Gazatte வெளியிடுவார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios