Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் பழைய நிலைக்கு வந்தா தான் சென்னை வருவேன்!! விஜயபாஸ்கர் அதிர்ச்சி சபதம்

தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

I Will Come to chennai after complete my work
Author
Chennai, First Published Dec 9, 2018, 3:48 PM IST

கஜா புயல் வந்து அடித்து நொறுக்கியதிலிருந்து தமிழக அரசு சார்பில்  நிவாரணப்பணியில் அங்கேயே முகாமிட்டிருக்கும் விஜயபாஸ்கர், ஜெயலலிதா நினைவு தினத்திற்கு கூட அமைதிப்பேரணிக்கு வராமல் அங்கேயே இருந்தார். 

நிவாரணப்பணி தொடங்கியதிலிருந்து தீயாக வேலை செய்யும் விஜயபாஸ்கர். மின் ஊழியர் ஒருவர் மின்சார தாக்கிய   போது மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு  அவரின் கூடவே இருந்து, தேவையான உதவிகளை செய்தது  மட்டுமல்லாமல், மின்சாரம் தாக்கிய நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

I Will Come to chennai after complete my work

அமைச்சரின் இந்த பொறுப்பான செயலுக்கு  அங்கிருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமல்ல அந்த பகுதியில் மக்களோடு மக்களாக உணவருந்துவது தோசை சுட்டு கொடுப்பது என அமைச்சர் என்ற பந்தாவே இல்லாமல் சாதாரணமாகவே அசத்துகிறார்.

I Will Come to chennai after complete my work

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 95% மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்பதை உறுதிசெய்த பின்பு தான் சென்னைக்கு புறப்படுவேன் என சபதம் எடுத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios