Asianet News TamilAsianet News Tamil

ஆர்யன் கான் மீதான வழக்கு பாஜகவின் சதி... ஜாமீன் கிடைத்ததும் பகீர் குற்றச்சாட்டு..!

போதைப்பொருள் வழக்கு என்சிபி அதிகாரி வான்கடே வழியாக பாஜக செய்த சதி என அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
 

drug case a BJP conspiracy via Wankhede: Nawab Malik
Author
Mumbai, First Published Oct 29, 2021, 1:52 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மீதான போதைப்பொருள் வழக்கு என்சிபி அதிகாரி வான்கடே வழியாக பாஜக செய்த சதி என அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.drug case a BJP conspiracy via Wankhede: Nawab Malik

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததும் நடிகை ரியா சக்ரவர்த்தி என்சிபியால் கைது செய்யப்பட்டதும் இந்த சதியில் தொடங்கியதாக மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். 

ஆர்யன் கானுக்கு பம்பாய் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் இதனை தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவையும் இங்கு வாழும் மக்களையும் பாலிவுட் துறையையும் இழிவுபடுத்துவதற்காக NCB மண்டல அதிகாரி சமீர் வான்கடே மூலம் கப்பல் போதைப்பொருள் வழக்கு செய்யப்பட்டிருப்பதற்கு பின்னணியில் பாஜகவில் சதி இருக்கிறது” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

 drug case a BJP conspiracy via Wankhede: Nawab Malik

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததும் நடிகை ரியா சக்ரவர்த்தி என்சிபியால் கைது செய்யப்பட்டதும் இந்த சதி தொடங்கியதாக மாலிக் கூறினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நொய்டாவில் ஒரு திரைப்பட நகரத்தை உருவாக்குவதைக் குறிப்பிட்டு, "எங்கள் பாலிவுட்டை அவதூறு செய்ய முயற்சிக்கிறார்கள், அதை மும்பையிலிருந்து உத்தரபிரதேசத்திற்கு மாற்ற முயற்சிக்கின்றனர்" என்று மாலிக் கூறினார்.

இதையும் படியுங்கள்:- மகன் பொம்பள பித்தன்... போதை கிறாக்கி... மகள் சுனாஹா எப்படி வளர்த்திருக்கிறார்..? ஷாருக்கான் ரொம்ப மோசம்தான்.!

இந்த போதை பொருள் வழக்கை "போலி" என்று மாலிக் பலமுறை குறிப்பிட்டு, வான்கடே மீது சட்ட விரோதமான தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

"திரைப்படத் துறையுடன் விளையாடுவதற்காக" வான்கடேவை என்சிபிக்கு மத்திய அரசு எப்படிக் கொண்டு வந்தது என்பதை மாலிக் எடுத்துக்காட்டியுள்ளார். நேற்று, சமீர் வான்கடேவின் சகோதரி யாஸ்மீன் வான்கடே, தன்னை அவதூறு செய்ததாகக் கூறி மாலிக் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி போலீசில் புகார் செய்தார். மாலிக் தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் இழிவுபடுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

drug case a BJP conspiracy via Wankhede: Nawab Malik

NCB இன் வான்கடே போதைப்பொருள் ஏஜென்சியைப் பயன்படுத்தி போலி வழக்குகளைப் பதிவுசெய்து மாநில அரசாங்கத்தின் நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதாக மகாராஷ்டிர அரசாங்கத்தில் அமைச்சர்கள் குற்றம் சாட்டியதன் மூலம் இந்த வழக்கு அரசியல் சூடுபிடித்துள்ளது. ஆர்யன் கான், அவரது நண்பரான அர்பாஸ் மெர்ச்சன்ட் மற்றும் மாடல் மாடல் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி என்டபிள்யூ சாம்ப்ரே நேற்று ஜாமீன் வழங்கினார். இந்த உத்தரவின் நகலை இன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இதையும் படியுங்கள்:- அவன் பொம்பள பித்தனாவும், போதைக்கும், உடலுறவுக்கும் அடிமையாகணும்.. தன் மகனின் 3 வயதிலேயே ஆசைப்பட்ட ஷாருக்கான்!

23 வயதான அவர் மும்பை கடற்கரையில் சொகுசு கப்பலில் ஒரு பயணத்தில் இருந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் அல்லது என்சிபியால் கைது செய்யப்பட்ட பின்னர் 24 நாட்கள் சிறையில் கழித்துள்ளார். அதன் மண்டலத் தலைவர் சமீர் வான்கடே தலைமையிலான என்சிபி ஆர்யன் கான் மற்றும் பிறருக்கு போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பரிவர்த்தனைகளில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios