செ** வீடியோவை வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறியுள்ளார்... எந்த தலைவர் அப்படி சொல்வார்? காயத்ரி ரகுராம் காட்டம்!!
அண்ணாமலை மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவை விட்டு விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவை விட்டு விலகிய காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அண்ணாமலை குறித்து கட்சியை விட்டு விலகிய காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள டிவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இப்போதாவது ஞானம் வந்ததே.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த திருமாவளவன் - ட்விஸ்ட்டா இருக்கே!
அவரது டிவிட்டர் பதிவில், பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது. அண்ணாமலை நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது செய்யவில்லை. டேப்களை மட்டும் சேகரிக்கிறீர்களா?
இதையும் படிங்க: விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என கட்டாயம் இல்லை- அண்ணாமலை ஆவேசம்
கட்சியில் இருப்பவர்களுக்கு ஒருவரின் நலமும் பாதுகாப்பும் அமைய வேண்டும் என்று அண்ணாமலை வாழ்த்த வேண்டும். ஒருவரை கட்சியை விட்டு வெளியே செல்லும் போது மற்ற இடங்களில் அவர்கள் நலமும் பாதுகாப்புடன் இருந்தால் அண்ணாமலை அதை கொடுக்க தவறிவிட்டார் அல்லது தோல்வியடைந்தார் என்று அர்த்தம். தற்போது இது சரியான ஆதாரம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.