தாம்பத்ய உறவில் தோற்றுப்போகும் ஆண்கள்...! காரணம் இதோ....
தாம்பத்ய உறவில் தோற்று போகும் ஆண்கள்...! காரணம் இதோ....
திருமண வாழ்கையில் தாம்பத்யம் என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிந்த ஒன்றே,... ஆனாலும் இன்றைய தலைமுறையினர் தாம்பத்ய உறவில் “ஆசை 60 நாள்..மோகம் 30 நாள் “ என்பதற்கு ஏற்ப, திருமணம் முடிந்த சில நாட்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்..பின்னர் தான் தலைவலி தொடரும்....
காரணம் பல ..
வேலைசுமை காரணமாக மனைவியிடம் நேரம் செலவழிப்பது குறைவு
சரியான நேரத்தில் சரியான உணவு உண்ணாமல்...பேருக்கு சும்மா பாஸ்டபுட் முதல் பீட்சா வரை....
ஒரு சில நிறுவனங்களில் 12 மணி நேர உழைப்பு ...இதனால் ஏற்படும் மன அழுத்தம்....
கணினியில் அதிக நேரம் வேலை செய்வதால், அதனுடைய சூடு நம் உடலையும் தாக்கும் இதன் காரணமாக உடல் அதிக வெப்பமாகி, ஹார்மோன் பிரச்னை வந்து விடுகிறது....
பிறகு மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வரும் இளசுகள்.... தாம்பத்யத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள்....விளைவு சண்டை, சந்தேகம், சச்சரவு....கணவர் இது போன்று, தாம்பத்யத்தில் ஈடுபட ஆர்வம் காட்டாத போது,மனைவிக்கு சந்தேகம் வர தொடங்கும்...வேறு யாருடனாவது தொடர்பு உண்டோ என....
இதே போன்று மனைவி ஆர்வம் காட்டவில்லை என்றாலும், கணவருக்கு மனைவி மீது சந்தேகம் வரும்..
அதாவது ஆரம்பமே தோல்வி தான்....எப்போதும் ஒரே மாதிரியான ஒரு புரிதலுடன் செல்லும் போது எந்த பிரச்சனை இல்லாமலும் நாட்கள் செல்லும்...பின்னர் படிப்படியாக பிரச்னை வர தொடங்கும்.
எனவே எங்கு பிரச்னை என்பதை சரியாக புரிந்துகொண்டு,அதற்கேற்றார் போல் வாழ்க்கை நடத்துவது மகிழ்ச்சி .