ராம்லீலா நாடகத்தில் ஆபாச உடை அணிந்து ஆடிய பெண்.. சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ !
ராம்லீலா நாடகத்தின் போது, பெண் ஒருவர் ஆபாசமான உடை அணிந்து பாடல் ஒன்றுக்கு ஆடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தசரா இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்றாகும், முக்கியமாக இதே முறையில். விழாவைக் கொண்டாடும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவணன், கும்பகரன், மேகநாதர் ஆகிய அசுரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?
விஜயதசமி என்றும் அழைக்கப்படும் இவ்விழா தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடுகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் ராம்லீலா நாடகங்கள் நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் கிராமத்தில் ராம்லீலா நாடகத்தின் போது, பெண் ஒருவர் ஆபாசமான உடை அணிந்து பாடல் ஒன்றுக்கு ஆடியுள்ளார்.
இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. புனித நிகழ்விற்காக கூடியிருந்த கூட்டத்தில், ஆபாச உடையில் பெண் ஆடிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வளர்கிறது.
இதையும் படிங்க..மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?