Tirumala Tirupati Devasthanams: திருப்பதியில் இனி க்யூ நிற்க வேண்டிய அவசியமில்லை: ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். எப்படி என்பதை பார்ப்போம். 

உலகின் மிகவும் பணக்காரக் கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான். இவரை தரிசிக்க தினமும் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்தாலும், ஐந்து நிமிடங்களில் எல்லா தரிசன டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடுவது இதற்குச் சான்றாகும். ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமல்லாமல், முன்பதிவு இல்லாமல் வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: Tirupati Temple: டோட்டலாக மாறும் திருப்பதி கோவில்! தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!

இதனால் தான் எவ்வளவு நவீன வசதிகள் இருந்தாலும் சில நேரங்களில் பல மணி நேரம் க்யூவில் நிற்க வேண்டியிருக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் க்யூவில் நிற்க வேண்டியே சூழல் அவ்வப்போது ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண திருப்பதி வேதஸ்தானம் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் விரைவில் இது நடைமுறைக்கு வந்தவுடன், ஒரு மணி நேரத்திலேயே தரிசனம் பெற முடியும்.

முக அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (facial recognition-based Artificial Intelligence (AI)) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்களின் காத்திருக்கும் நேரம் குறையும். இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் TTD அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் AI தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும். இது திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, சாதாரண பக்தர்கள் 1 மணி நேரத்திற்குள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும். பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏற்கனவே திருப்பதி மற்றும் திருமலையில் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளதாக TTD தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார். 

 விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் டிஜி யாத்ரா முறையால் ஈர்க்கப்பட்டு, AI தொழில்நுட்பம் மூலம் முக அடையாளத்தைப் பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்துகிறோம். ரயில் நிலையம், பேருந்து நிலையம், அலிபிரி உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, தரிசனத்திற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு மணி நேரத்திற்குள் வரிசையில் சேரலாம், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தரிசனம் பெறலாம் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட்! பெறுவது எப்படி?

இந்த புதிய முறையை தற்போது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செயல் விளக்கம் செய்து வருகிறது. தாராளமாக நன்கொடை அளித்தவர்கள் இதற்கு நிதியுதவி செய்துள்ளனர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கள்ளச் சீட்டுகளை ஒழிக்க முடியும். இந்த திட்டத்தால் பக்தர்களைப் பிரிக்கும் தற்போதைய முறை காலாவதியாகும். எல்லா பக்தர்களுக்கும் தடையற்ற மற்றும் மரியாதைக்குரிய அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நேர அடிப்படையிலான தரிசன முறை கள்ளச் சீட்டுகளால் பாதிக்கப்பட்டது. 

மேலும், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் நேரமும் அதிகமாக இருந்தது. இந்த பாதுகாப்பான முறையின் மூலம் எந்த பக்தராக இருந்தாலும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்குள் தரிசனம் பெற முடியும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த முறையை செயல்படுத்த இலக்கு வைத்துள்ளோம், முடிந்தால் இன்னும் விரைவாகவே இதை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.