MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட்! பெறுவது எப்படி?

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட்! பெறுவது எப்படி?

திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட்டை ஈசியாக பெறலாம். கோகுலம் கெஸ்ட் ஹவுஸ் பின்புறம் புதிய கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது, தினமும் 900 டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

1 Min read
vinoth kumar
Published : Nov 14 2024, 05:03 PM IST| Updated : Nov 14 2024, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tirumala Tirupati Devasthanam

Tirumala Tirupati Devasthanam

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருப்பதி செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் தரப்பில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகிறது.

24
TTD online booking

TTD online booking

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் யாருடைய சிபாரிசு கடிதங்களும் இல்லாமல் நேரடியாக வி.ஐ.பி. டிக்கெட்டுகளைப் பெற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் ஒரு பக்தருக்கு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் நன்கொடை பெற்று வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்படுகிறது. 

இதையும் படிங்க: Annamalaiyar Temple: திருவண்ணாமலை கோவிலுக்கு போறீங்களா? இந்த தேதியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

34
VIP Darshan Tickets

VIP Darshan Tickets

நேரடியாக திருமலைக்கு வரும் பக்கர்களுக்கு திருமலையில் நேரடியாக கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. இங்கு போதிய வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கோகுலம் கெஸ்ட் ஹவுஸ் பின்புறத்தில் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளுக்கான புதிய கவுன்டரை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி சிறப்பு பூஜைகள் செய்து நேற்று திறந்து வைத்தார். பக்தர்களிடம் விவரம் பெற்றுக் கொண்டு முதல் டிக்கெட் வழங்கினார்.

44
Tirumalai Temple

Tirumalai Temple

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெங்கையா சவுத்திரி: கடந்த காலங்களில் ஸ்ரீவாணி கவுண்டர் வரிசைகளில் மழை பெய்தால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு  சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது.  இனி ஸ்ரீவாணி டிக்கெட்டை பக்தர்கள் எந்த ஒரு சிரமமின்றி ஈசியாக பெறலாம். ஒரு நாளைக்கு 900 டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் (ஆப்லைனில்) வழங்கப்படும். ஒரே நிமிடத்தில் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved