மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது.

மத்தியப் பிரதேசமாநிலம்தாமோவில்உள்ளகங்காஜமுனாமேல்நிலைப்பள்ளியில், இந்துமாணவிகள்உட்படபெண்கள்ஹிஜாப் போலதலையில்முக்காடுஅணிந்திருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் மாணவிகள், ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்துஉள்துறைஅமைச்சர்நரோத்தம்மிஸ்ராகூறுகையில், “ ஹிஜாப் புகார் தொடர்பாக, முதலில்மாவட்டகல்விஅதிகாரிவிசாரணைநடத்தினார். இதுதொடர்பாகஎந்தபுகாரும்வரவில்லை. இப்பிரச்னையின்தீவிரத்தைகருத்தில்கொண்டு, இதுகுறித்துமுழுமையாகவிசாரிக்க, காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையும் படிங்க : மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி செய்த நாடகம் புதிய நாடாளுமன்றம், செங்கோல் ; ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம்!

இதனிடையே, இந்துமாணவிகளைஹிஜாப்அணியகட்டாயப்படுத்துவதாகக்கூறிஇந்துஅமைப்பினர்மாவட்டஆட்சியர்அலுவலகத்தில்போராட்டத்தில்ஈடுபட்டனர். மேலும்பள்ளியின்பதிவைரத்துசெய்யக்கோரிஅவர்கள்மனுஅளித்தனர். எனினும் மதமாற்றம்தொடர்பானகுற்றச்சாட்டுகுறித்துஏற்கனவே விசாரணைநடத்தப்பட்டதாகவும், ஆனால்அதுஉண்மையெனகண்டறியப்படவில்லைஎன்றும் தாமோ மாவட்ட ஆட்சியர் மயங்க்அகர்வால்தெரிவித்தார்.

மேலும்இந்தகுற்றச்சாட்டில்எந்தஆதாரமும்இல்லை. உள்துறைஅமைச்சரின்உத்தரவுக்குபின், தாசில்தார், மாவட்டகல்விஅலுவலர்மற்றும்போலீஸ்அதிகாரிகள்அடங்கியகுழுஅமைத்துவிசாரணைநடத்தப்பட்டுவருகிறது.” என்று தெரிவித்தார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பள்ளி உரிமையாளர் முஸ்டாக்கான்பள்ளியில் யாரையும் ஹிஜாப் அணியகட்டாயப்படுத்தவில்லைஎன்றுதெரிவித்தார்.

இதனிடையே தேசியகுழந்தைகள்உரிமைகள்பாதுகாப்புஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர்பிரியங்க்கனூனாகோஇதுகுறித்து தனதுட்விட்டர்பக்கத்தில்பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ மத்தியப்பிரதேசத்தின்தாமோமாவட்டத்தில்உள்ளபள்ளிஒன்றில் சீருடை என்ற பெயரில்இந்துமற்றும்பிறமுஸ்லிம்அல்லாதசிறுமிகளைபர்தாமற்றும்ஹிஜாப்அணிய கட்டாயப்படுத்துவதுகுறித்துபுகார்வந்துள்ளது.. தேவையானநடவடிக்கைக்காகதாமோகலெக்டர்மற்றும்காவல்துறைகண்காணிப்பாளருக்குஅறிவுறுத்தல்கள்அனுப்பப்பட்டுவருகிறது”தெரிவித்தார்.

கடந்தஆண்டு, கர்நாடகாவில்உள்ள, உடுப்பியில்உள்ளஒருஅரசுபியூசி கல்லூரிவகுப்பறைகளுக்குள்முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாத பொருளானது. இதை தொடர்ந்து கர்நாடகாவின் அப்போதையபாஜகஅரசு, கல்லூரிவளாகங்களுக்குள்ஹிஜாப்அணிவதைதடைசெய்ததுசிலமுஸ்லீம்மாணவிகள்நீதிமன்றத்தைநாடியதையடுத்து, கர்நாடகஉயர்நீதிமன்றம்அரசின்உத்தரவைஉறுதிசெய்தது. இந்தத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பைவழங்கியதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காங்கிரஸ் பார்முலா நாட்டையே திவால் ஆக்கிவிடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு