தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும்,துறைகளும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும்,துறைகளும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்

சிவசேனா கட்சி, காங்கிரஸுடன் சேர்ந்து அமைத்த மகாவிகாஸ் அகாதி ஆட்சி கவிழ்ந்து இரு வாரங்களுக்குள் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளையும் கலைக்க சரத் பவார் உத்தரவிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் படேல் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ கட்சியின் தேசியத் தலைவர் சரத் பவாரின் ஒப்புதலுடன், கட்சியின் அனைத்துப் பிரிவுகள், துறைகள் உனடியாக கலைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்... பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!!

எந்த காரணத்துக்காக கட்சியின் அனைத்துப் பிரிவுகளும், துறைகளும் கலைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க தேசியவாத காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மறுத்துவிட்டனர். 

நண்பர்கள் சொல்லாததைக் கூட கேட்கும் பிரதமர் மோடி, மக்களின் பேச்சைக் கேட்பாரா: ராகுல் காந்தி விளாசல்