கல்லூரி விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் விடுதி மாணவிகள் 60 பேரின் குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக கேமரா வைத்து வீடியோ எடுத்திருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் ஹாஸ்டல் மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். ரகசிய வீடியோ எடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மொஹாலியை சேர்ந்த மாணவி, தங்களுடன் பயின்று வந்த மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தன்னுடைய காதலனுக்கு அனுப்பி இருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு..மாணவிகளின் 60 குளியல் வீடியோக்கள் கசிந்தது.. அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற மாணவிகள் - பரபரப்பு சம்பவம்.!

இந்த நிலையில், அந்த ஆண் காதலன் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த கல்லூரி மாணவி, கடந்த பல மாதங்களாக இப்படி வீடியோக்களை எடுத்து கசியவிட்டுள்ளார் என்றும், சிறிய அளவிலான கேமராக்களை வைத்து, பாத்ரூமில் இவர் வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Scroll to load tweet…

பின்னர் அந்த மாணவி இமாச்சலில் உள்ள தனது காதலனுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி உள்ளார். மாணவி ஒவ்வொரு முறை வீடியோவை அனுப்பும் போதும் இவருக்கு பணம் வந்துள்ளது. இதனால் தொடர்ந்து மாணவிகள் குளிப்பதை வீடியோக்களை எடுத்து வந்துள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ, கல்லூரி மாணவிகளுக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட சுமார் 60 மாணவிகளின் வீடியோக்கள் வெளியானதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அந்த பெண் கடைசியாக வீடியோ எடுக்கும் போது ஹாஸ்டல் நிர்வாகிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை எடுத்த பெண் சண்டிகர், மொகாலியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..“நள்ளிரவில் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்”.. இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

Scroll to load tweet…

எம்பிஏ படிக்கும் முதலாம் ஆண்டு மாணவி ஆவார். சமீபத்தில்தான் அந்த பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்துள்ளார். சேர்ந்து 3 மாதங்களில் அவர் இப்படி 60 வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவிகளின் குளியல் வீடியோக்களை ஆபாச தளத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?