கேரள படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கேரளமாநிலம்மலப்புரம்மாவட்டம்தனூர்- பரப்பனங்காடிகடற்கரையில் 40 பேருடன்சென்றசுற்றுலாசொகுசுபடகு நேற்றிரவு எதிர்பாராதவிதமாககடலில்கவிழ்ந்துவிபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் 4 குழந்தைகள்உட்பட22 பேர் உயிரிழந்தனர். இந்தவிபத்துகுறித்துதகவலறிந்துசம்பவஇடத்திற்குவிரைந்தமீட்புபடையினர்நீரில்மூழ்கிய 20 பேரைபத்திரமாகமீட்டுமருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர். அங்குஅவர்களுக்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.
இந்தபடகில் 25 பேர்ஏற்றவேண்டியபடகில் 40 பேர்வரைஏற்றியதன்காரணமாகவிபத்துஏற்பட்டுள்ளதாகமுதற்கட்டதகவல்வெளியாகியுள்ளது. மேலும் படகில் பயணித்தவர்கள் யாரும் லைஃப் ஜாக்கெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு அமைதியான மாநிலம்... போலி வீடியோவைப் பரப்பி அமைதியை சீர்குலைக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்
இந்நிலையில் மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு கேரள அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், மலப்புரம் மாவட்டம், திருரங்கடியில் உள்ள தாலுகா மருத்துவமனைக்குச் சென்று, படகு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இவ்வளவு பெரிய சோகம் நடந்துள்ளது. 22 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஐந்து பேர் நீச்சலடித்து தப்பினர்... இந்த மக்களை எந்த வார்த்தையும் ஆறுதல்படுத்த முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசே ஏற்கும்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். இந்த நீதி விசாரணையில், படகின் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்குவோம். இந்த வழக்கை காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும்” என்று தெரிவித்தார்..
இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் இந்திய கடலோர காவல்படை குழுக்கள், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடல்கள் மீட்கப்பட்ட 22 பேரும் அடையாளம் காணப்பட்டதாக மூத்த மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்து ஏஜென்சிகளின் உதவியையும் கோரியுள்ளோம். NDRF மற்றும் கடலோர காவல்படை குழுக்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு வந்துவிட்டன. நாங்கள் கடற்படையின் உதவியையும் நாடியுள்ளோம்" என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும் கடலில் கவிழ்ந்த படகில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இதையும் படிங்க : 12-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலான மாணவர்களே கவலை வேண்டாம்.. துணை தேர்வு தேதி அறிவிப்பு..
