அடுத்தவன் பொண்டாட்டிக்கு "3300 முறை போன் செய்த கொடூரன்"..!! மேஜரை தூக்கிலிட கோரிக்கை...!
அடுத்தவன் பொண்டாடிக்கு 3300 முறை போன் செய்த கொடூரன்..!! மேஜரை தூக்கில் இட கோரிக்கை...!
ராணுவ அதிகாரியின் மனைவிக்கு 3300 முறை போன் செய்து, பின்னர் திட்டம் போட்டு கொலை செய்த மேஜரை போலீசார் கைது செய்து உள்ளனர்
டெல்லியில் வசித்து வருபவர் ராணுவ அதிகாரியான அமித் திவேதி. இவருடைய மனைவி சைலஜா திவேதி. இவர் சனிக்கிழமையன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றவர், பின்னர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சைலஜாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இறக்கி விட்டு சென்று உள்ளார் அவருடைய கார் டிரைவர். பின்னர் மீண்டும் அழைத்து வர சென்ற போது தான் தெரியவந்துள்ளது, சைலஜா சிகிச்சைக்காக அன்று வரவில்லை என்று ....
இதனை தொடர்ந்து அவருடைய கணவர் அமித் மனைவியை அங்கும் இங்குமாக தேடி உள்ளார். இதற்கிடையில் டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் சைலஜா பிணமாக கிடந்தது உள்ளார்.முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்பட்டு உள்ளது என தான் கூறப்பட்டது.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த போது அவரை திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது
கொலை செய்தது யார் ..? எதற்காக இந்த கொலை..?
கடந்த 2015 ஆண்டு, அமித் திவேதி நாகலாந்தில் பணி செய்து வந்துள்ளார்.அங்கு தான் இவருடைய மனைவிக்கும் மேஜர் நிக்கல் ஹன்டாவுக்கும் முதல் முறையாக பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில், அமித் திவேதி பணி இடமாற்றம் செய்து டெல்லி சென்று உள்ளார். இருந்த போதிலும் தொலைபேசியிலும், வீடியோ கால் மூலமாகவும் இருவரும் பேசி பழகி நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று உள்ளனர்
ஒரு முறை, தன் மனைவி சைலஜா மேஜர் உடன் வீடியோ காலில் பேசுவதை நேரில் பார்த்த அமித் திவேதி மனைவியை கண்டித்து உள்ளார். இருப்பினும் இவர்களுடைய நட்பு விடாது கருப்பு போல தொடர்ந்து உள்ளது.
திருமணம் செய்ய வற்புறுத்தல்
நட்பு ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி பெரும் டார்ச்சராக மாறி உள்ளது சைலஜாவிற்கு....அதாவது அமித் திவாரியை பிரிந்து வந்து தன்னை திருமணம் செய்துக்கொள் என தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார் மேஜர் நிக்கல் ஹண்டா
கணவரை விட்டு பிரிந்து வர மறுப்பு தெரிவித்ததால் போட்டு தள்ளிய மேஜர்..!
எவ்வளவு டார்ச்சர் செய்தும் சைலஜா, கணவரை விட்டு பிரிந்து சென்று மேஜரை திருமணம் செய்துக்கொள்ள ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேஜர் சைலஜாவை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு, நடு ரோட்டில் காரில் இருந்து தள்ளிவிட்டு சென்று உள்ளார்.
அப்படியே விட்டால் சந்தேகம் வரும் என்பதால், அதனை ஒரு விபத்து போல் காண்பிக்க வேண்டும் என நினைந்து நாடகமாடிய மேஜர், மீண்டும் மீண்டும் சைலஜாவின் கழுத்து மீது காரை ஏற்றி உள்ளார். முதற்கட்ட விசாரணையில் விபத்து என நினைத்தாலும், பின்னர் பிரேத பரிசோதனையில் வந்த அறிக்கையை வைத்தே சந்தேகத்தின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தி, மேஜரை கைது செய்தனர்.
அடுத்தவன் பொண்டாடிக்கு 3300 முறை போன் செய்த கொடூரன்
விசாரணையில், தன்னை திருமணம் செய்துக்கொள்ள கணவரை விட்டு வருமாறு தொடர்ந்து சைலஜாவிற்கு மேஜர் 3300 முறை போன் செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
அதுவும் கடந்த ஜனவரி மாதம் முதல் சைலஜாவை கொலை செய்யப்பட்டது வரை மட்டுமே 3300 முறை போன் செய்தும் சைலஜா போனை எடுக்காமல் இருந்துள்ளார். சில சமயத்தில் போனை ரிசீவ் செய்தாலும் மேஜரை திட்டியும், போனை கட் செய்தும் உள்ளார்.
இதனால் மேலும் கொதிப்படைந்த மேஜர், சைலஜாவை தீர்த்துக்கட்டும் அளவிற்கு சென்றுள்ளார்.அதன் விளைவு தான் சைலஜாவின் உயிர் பலி.
அன்று தொடங்கிய தவறான இந்த பழக்கம் தான் இன்று சைலஜாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாகவும் அமையும்.
இந்நிலையில் மேஜர் செய்த இந்த கொடூர சம்பவத்திற்கு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலை கிளம்பியுள்ளது. மேஜருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை தெரிவித்தும் அவரை தூக்கிலிடவேண்டும் என கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.
குறிப்பாக டெல்லியிலும், நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களிலிருந்தும் அவரை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
மேலும் இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் மக்கள், மேஜருக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.