Asianet News TamilAsianet News Tamil

கைதாகிறார் கைலாசா ஆண்டவர்.. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு - எல்லாம் முடிஞ்சு போச்சு !

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A non bailable arrest warrant has been issued for Nithyananda in the sex case
Author
First Published Aug 19, 2022, 7:16 PM IST

நித்யானந்தா இந்த பெயரை நாம் எவரும் மறக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு மீம் கன்டென்ட் ஆகி வருபவர் என்றே கூறலாம். கைலாசா தீவுக்கு வாருங்கள் என்று கூறி இளைஞர்களை உற்சாகப்படுத்தி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். 

சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என்றும் நான் மீண்டு விட்டேன் என்றும் கூறி மீண்டும் மீண்டும் அலப்பறை கொடுத்து வந்தார் என்றே கூறவேண்டும்.  கர்நாடக மாநிலத்தில் ராம நகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது.   

A non bailable arrest warrant has been issued for Nithyananda in the sex case

மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?

இந்த ஆசிரமத்தில் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடரி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது .இந்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்த வழக்கின் விசாரணைக்காக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் நித்தியானந்தா தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.  

 இந்த நிலையில் இந்த பாலியல் தொல்லை வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.   அப்போது நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில்  வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்  நீதிபதி. இந்த வழக்கின் மறு விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

A non bailable arrest warrant has been issued for Nithyananda in the sex case

தனக்கு எதிராக பாலியல் வழக்கு தீவிரப்படுத்தப்படவே உடனே இந்தியாவைவிட்டு வெளியேறினார் என்று அப்போது கூறப்பட்டது. அவர் இந்தியாவிற்கு உள்ளேயே தலைமறைவாக இருந்து வருகிறார் என்ற தகவலும் இருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டுக்கு அருகே உள்ள ஏதோ ஒரு தீவில் அதாவது, கைலாசா தீவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Follow Us:
Download App:
  • android
  • ios