Asianet News TamilAsianet News Tamil

நோய் X என்பது என்ன? அதன் பரவல் குறித்து விஞ்ஞானிகள் ஏன் கவலைப்படுகின்றனர்?

நோய் X என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

What is disease X why scientists worried about its spread Rya
Author
First Published Jan 23, 2024, 8:18 AM IST

கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் குறைந்து வரும் நிலையில், மற்றொரு ஆபத்தான புதிய நோய் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். நோய் X என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது. மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் திறன் கொண்ட 25 வைரஸ் குடும்பங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸை விட நோய் X 20 மடங்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், மேலும் இது பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நோய் X இப்போது உண்மையான அச்சுறுத்தல் இல்லை, ஆனால் எதிர்காலத்தில் அது வெளிப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் இறப்புகள் மற்றும் பேரழிவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் அறுவுறுத்தி உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து எச்சரித்துள்ளார். இந்த நோயால் ஏற்பட அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருக்குமாறு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "தெரியாத விஷயங்கள் நடக்கலாம், எதுவும் நடக்கலாம். அதனால் நமக்குத் தெரியாத நோய்களுக்கு ஒரு தனி இடத்தை வைத்திருக்க வேண்டும்" என்று கெப்ரேயஸ் கூறினார்.

நோய் X என்றால் என்ன?

நோய் X என்பது ஒரு குறிப்பிட்ட நோய் இல்லை. இது தற்போது அறியப்படாத ஒரு நோயைக் குறிக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு கடுமையான நுண்ணுயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். எனவே இதற்கு நோய் X என்று பெயரிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அல்லது மருந்து சிகிச்சைகள் இல்லாத ஒரு நோயைக் கையாள்வதற்கான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும், மேலும் இது கடுமையான தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்" என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குருகிராமில் உள்ள சி.கே பிர்லா மருத்துவனை உள் மருத்துவத்தின் ஆலோசகர், டாக்டர் துஷார் தயல் பேசிய போது "Disease X' என்ற கருத்தை ஆராய்வது, தொற்று நோய்களின் கணிக்க முடியாத பகுதிளை ஆய்வு செய்வது. குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது குழுக்களை பாதிக்கும் வாழ்க்கை முறை அல்லது மரபணு நோய்கள் போலல்லாமல், நோய் X ஏற்படும் தொற்று நோய்கள், உலகளாவிய மக்களை பாதிக்கும் திறன் கொண்டவை.” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நிபுணர் மற்றும் கோவிட் விழிப்புணர்வு நிபுணர், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜெனரல் டாக்டர் பவித்ரா வெங்கடகோபாலன் இதுகுறித்து பேசிய போது “ தோற்றம், வகை மற்றும் பரவும் முறைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, இத்தகைய நோய்களின் தோற்றம் மற்றும் பரவலைக் கணிக்க விஞ்ஞானிகள் மேம்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்துகின்றனர்.நோய் X ஒரு கற்பனையான நோயாக இருந்தாலும் இது எதிர்கால தொற்று நோயைக் கற்பனை செய்கிறது. ஏற்கனவே கண்டறியப்பட்ட நோய் தொற்றுகளுடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகளை எழுப்புகிறது,"என்று தெரிவித்தார்.

துஷார் தயல் இதுகுறித்து பேசிய போது “ கோவிட்-19 பரவுவதற்கு முன்பே, புதிய தொற்றுநோயை உருவாக்குவதற்கான பிரதான போட்டியாளராக கொரோனா வகை வைரஸ் நீண்ட காலமாகக் காணப்பட்டன. SARS மற்றும் MERS ஆகியவை தொற்றுநோய்களை ஏற்படுத்தும் திறன் கொண்ட கொரோனா வைரஸ்கள் கடுமையான நடவடிக்கைகளுடன் கட்டுப்படுத்தப்பட்டன.

இருப்பினும், SARS மற்றும் MERS ஆகியவை ஒரு புதிய தொற்றுநோயைத் தூண்டுவதற்கு கடினமாக இருக்கும், ஏனென்றால் உலகில் கிட்டத்தட்ட அனைவரிடமும் கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் வைரஸுக்கு ஆன்டிபாடிகள் உள்ளன, மேலும் இவை கொரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள பிற நோய்க்கிருமிகளுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பை வழங்குகின்றன. கடந்த காலங்களில் தொற்றுநோய்களை ஏற்படுத்திய ஃப்ளூ வைரஸ்கள் - எபோலா மற்றும் ஜிகா போன்ற வைரஸ்களும் தொற்றுநோய்க்கான திறனைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

"எதிர்கால தொற்று நோய்களுக்கான முன்கணிப்பு மாதிரியாக நோய் X செயல்படுகிறது. நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற இந்த நோய்கள் பெரும்பாலும் தனிப்பட்ட செயல்கள் அல்லது மரபணு முன்கணிப்புகளுடன் தொடர்புடையது, மாறாக, காற்று, நீர் அல்லது உணவு மூலம் பரவக்கூடிய தொற்று நோய்கள், மக்கள்தொகையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை

வாழ்க்கைமுறை நோய்கள் அனைவரையும் பாதிக்காது. ஆனால், தொற்று நோய்கள் உயிர்வாழ்வதற்கான நமது அடிப்படைத் தேவைகளான காற்று, நீர் மற்றும் உணவு ஆகியவற்றுடன் தொடர்புகொள்வதால் பலரைச் சென்றடையலாம்.

கோவிட் -19 அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஸ்பானிஷ் காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் பரவுகின்றன, ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே காற்றை தான் சுவாசிக்கிறோம். நமது சமூக இயல்பு மற்றும் நெருங்கிய தொடர்புகள் தொற்று நோய்களின் பரவலான தாக்கத்திற்கு பங்களிக்கின்றன," என்கிறார் டாக்டர் பவித்ரா.

கொரோனாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் நோய் X ஐ சமாளிக்க எப்படி உதவுகின்றன?

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம், நாம் விழிப்புடனும், தயாராகவும் இருந்தால், எதிர்காலத்தில் வரும் நோய் X தொற்றுநோய்களைக் கையாள்வதற்கு உதவும்."புதிய நோய்க்கிருமிகளை இலக்காகக் கொண்டு விரைவாக மறுபயன்பாடு செய்யக்கூடிய புதிய தடுப்பூசி வடிவமைப்புகள், புதிய நோய்க்கிருமிகளுக்கு எதிராக விரைவாகவும் திறம்படமாகவும் தடுப்பூசிகளை உருவாக்கும் திறனை நமக்குக் காட்டியுள்ளன” என்று துஷார் தயல் கூறுகிறார்.

ஏன் நோய் X 20 மடங்கு அதிக ஆபத்தானது?

"வைரஸ்களும் பாக்டீரியாக்களும் நம்முடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறது. எனவே தொற்று நோய்களை சமூகத்தில் இருந்து நம்மால் அகற்றவே முடியாது. 20 மடங்கு அதிக மரணம் என்ற கருத்து, பரவும் வீதம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தாக்கத்தின் சாத்தியமான அளவை சுட்டிக்காட்டுகிறது.. உலக மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால், இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், தனிநபர்களின் எண்ணிக்கை அதிக உயிரிழப்புக்கு பங்களிக்கக்கூடும்.

உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளை தொற்றுநோய்களைக் கண்காணித்தல், கண்டறிதல் மற்றும் அறிக்கையிடுதல் ஆகியவை வளர்ந்து வரும் நோய்களுக்கு மிகவும் தகவலறிந்த மற்றும் விழிப்புடன் உலகளாவிய பதிலுக்கு பங்களிக்கின்றன" என்று டாக்டர் பவித்ரா தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios