Tips to get soft face

முகம் பிசுபிசுப்பை போக்க

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் எண்ணெய் வழிந்து சருமம் பிசுபிசுவென்று அசிங்கமாக இருக்கும். இந்த நிலையைப் போக்க சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம். ஆனால், பொலிவிழந்திருக்கும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட முடியாது. 

அதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகள் தான் உதவும். பிசுபிசுவென்று இருக்கும் முகத்தை பொலிவோடு வெளிக்காட்ட உதவும் ஃபேஸ் பேக்குகள் இதோ...

1.. சீமைச்சாமந்தி டீ 

சீமைச்சாமந்தியில் ஏராளமான சக்திவாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. இந்த சீமைச்சாமந்தியைக் கொண்டு டீ தயாரித்து, அத்துடன் ஓட்ஸ் பொடி, சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

2.. கிவி 

ஒரு கிவி பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, கனிந்த பகுதியை மசித்து, அத்துடன் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 துளிகள் சூரியகாந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, முகம், கை, கால் மற்றும் கழுத்தில் தடவி 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும்.

3.. சோள மாவு 

சோள மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும். அத்தகைய சோள மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

4.. பட்டை மற்றும் ஜாதிக்காய் 

1 டீஸ்பூன் பட்டை பொடியுடன், 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, முகம் பொலிவாகும்.