Asianet News TamilAsianet News Tamil

இவ்வளவு பயன்கள் தரும் மருதாணியை ஆண்கள் கூட பயன்படுத்தலாம்...

Men can also use henna that gives so much benefits ...
Men can also use henna that gives so much benefits ...
Author
First Published Mar 29, 2018, 12:32 PM IST


மருதாணியில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள்

மருதாணி கைகளுக்கு வெறும் அழகையும், நிறத்தையும் மட்டும் தராமல் மருத்துவக் குணங்களுக்கும் பயன்படும்.

பயன்கள்

** மருதாணி வைப்பதால் உடல்சூடு குறையும். நகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து நகச்சுத்து வருவது தடுக்கப்படுகிறது.

** அடிக்கடி மருதாணி இடுவதால் மனநோய் ஏற்படுவது குறையும். நாள்பட்ட புண்களை ஆற்றும்.

** மருதாணியின் பொடியினை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் தலைக்கு தேய்த்து வர முடி நன்கு வளரும், இளநரையினைப் போக்கும்.

** உள்ளங்காலில் வரும் ஆணிக்கு வசம்பு, மஞ்சள், கற்பூரம் சேர்த்து அரைத்துக் தொடர்ந்து ஆணி உள்ள இடத்தில் கட்டினால் ஒரு வாரத்தில் சரியாகும்.

** மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும் என அகத்தியர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலை புகைப்போடுவதால் துஷ்டத்தேவதைகள் விலகும்.

** மருதாணியின் பூவினை துணியில் கட்டி தூங்கும் போது தலைக்கு மேல் வைத்தால் தூக்கமின்மைப் பிரச்சனைகள் தீரும்.

** இலைகளின் வடிசாறு அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும்.

** கால் எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

** சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

** கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக போடலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios