medical tips
மன சோர்வு உள்ளவர்கள் புங்கை மர நிழல்ல இளைப்பாறி பாருங்கள். அடிக்கிற வெயில்ல எல்லோருமே புங்கை மர நிழல்ல படுத்துத் தூங்கினா; உடனே புத்துணர்ச்சி கிடைக்கும்.
அத்திப்பழ,ம் சாப்பிட்டால் கூட மனசோர்வு நீங்கும்.
கசகசாவை பால் விட்டு அரைச்சி கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
அகத்திக்கீரை சாப்பிடலாம்.
தினசரி காலைலயும், ராத்திரி சாப்பாட்டுலயும் கறிவேப்பிலை துவையல் சேர்த்துக்கிறது ரொம்ப நல்லது. இந்த துவையல்ல எலுமிச்சை சாறு சேர்த்து குழப்பி சாப்பிடுறது ரொம்ப நல்லது.
பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி எல்லாத்தையும் பொடியாக்கி ரெண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வந்தா மனசோர்வு நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
ராத்திரி தூங்கும்போது தலையணையில மருதாணிப்பூவை வச்சிட்டு தூங்குங்க. நிம்மதியா உறக்கம் வரும். அதேமாதிரி கால்ல மருதாணி பூசுங்க. அதுவும் நல்ல பலன் தரும்.
