கண்களில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரிசெய்யாவிட்டால் கண்பார்வையே கூட பறிபோகும்...
1. கண் எரிச்சல் நீங்க:
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு, சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும், கண் ஒளிபெறும்.
2. கண் பிரகாசம் அடைய:
தூது வளைகாயை ஊறுகாய் செய்து சாப்பிட கண் ஒளி பெறும்.
3. கண் வலி குணமாக:
ஒரு கரண்டி சீரகம் தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலை முழுகி வந்தால் குணமாகும்.
4. கண் நோய் நீங்க:
அன்னாசிப்பழம் சாப்பிட கண்நோய் குணமாகும்.
5. கண்வலி வராமல் தடுக்க:
எள் செடிய்யின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.
6. கண்கள் குளிர்ச்சியடைய:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட கண் குளிர்ச்சி பெறும்.
7. கண்புரை குணமாக:
கீழாநெல்லி இலை, வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் சாறு எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணீல் விட்டு வர கண்புரை குணமாகும்.
8. கண்பார்வை தெளிவு பெற:
அத்திமரத்தின் பூவில் சாறெடுத்து தினசரி 2 வேளை வீதம் 3 நாள் வரை கண்ணுக்குள் விட கண் பார்வை தெளிவு பெறும்.