Do you know As soon as we get up early in the morning the body will have a lot of changes in our body.

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ...

** தூங்கி எழுந்தவுடன் தண்ணீரை குடித்தால், உடலில் வளர்சிதை மாற்றம் ஒன்றரை மணி நேரத்தில் 24% அதிகமாகும்.

** தண்ணீர் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி, உடலில் தேவையின்றி இருக்கும் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்குகிறது.

** தூங்கி எழுந்தவுடன் நீர் குடிப்பதால், பசி குறையும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கிறது.

** தினமும் தண்ணீரை அதிகமாக குடித்து வருவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இதனால் நம் உடலின் நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

** சீரான அளவில் தினமும் நீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தால், சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

** காலை எழுந்ததும் நீர் குடித்து வந்தால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் வராது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.